சென்னை ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் கடைசி ஆண்டு ஐஐடி ரோபரில் வகுப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை, ஆக. 28- சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர் கள் பயனடையும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் BS (Bachelor Of Science) பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் பஞ்சாப் மாநிலம் ரோபரில் உள்ள ஐஐடியில் இறுதி ஆண்டையும் மேற்படிப்பையும் படிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதனன்று (ஆக. 28) கையெழுத்தானது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “சென்னைக்கு வந்து படிக்க முடியாதவர்களுக்கு கல்வியை எப்படி கொடுக்கலாம் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட படிப்பு தான் பிஎஸ் டேட்டா சயின்ஸ். இந்த படிப்பு மூலம் வேலை வாய்ப்புகள் பல உள்ளது. இதையடுத்து இந்த படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை கல்வியை எளிதாக்கும் முயற்சி யாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது. பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பை ஐஐடி மெட்ராஸில் படிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகள் இங்கு படித்துவிட்டு 4ஆம் ஆண்டு ஐஐடி ரோபரில் செய்முறை கல்வியை கற்றுக் கொள்வார்கள். அதில் ஆராய்ச்சி செய்வார்கள். அதில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டால், எம்எஸ் என்ற முதுநிலை படிப்புக்கு கேட் தேர்வு இல்லா மல் ஐஐடி ரோபர் படிக்க வாய்ப்பளிக்கிறது. அதேபோல், ஐஐடி ரோபரில் படிக்கும் மாணவர்களும் ஐஐடியின் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பை படிக்கலாம். இது போன்ற பல புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பாக அமையும். இது முதல் முறையாக இரண்டு ஐஐடி நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி ரோபர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என அவர் தெரிவித்தார்.
அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் மாற்றம்
சென்னை,ஆக.28- எழும்பூர் அருங்காட்சிய கத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15 விழுக்காடு அதிகரித் துள்ளது. எழும்பூர் அருங் காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் அருங்காட்சிய கத்தை தினமும் காலை 10.30 மணி முதல் 6.30 மணி வரை பார்வையிடலாம் என நிர்வாகம் தெரிவித் துள்ளது.
நடிகை கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
சென்னை,ஆக 28- சென்னை ஜாஃபர்கான் பேட்டை பச்சையப்பன் தெரு பகுதியில் படுத்துக் கிடந்த மஞ்சன் என்பவர் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் ஏறி இறங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். கைதான பாண்டி நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும், ரேகா நாயரின் பெயரில் இந்த கார் பதிவு செய்யப்பட்டிருப் பதும் தெரிய வந்தது.
தங்கம் விலை உயர்வு
சென்னை, ஆக. 28- கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ. 53,560 க்கு விற்பனை யானது. சென்னையில் புதனன்று ஆபரணத் தங்கத் தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,715-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 53,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அரசு பேருந்து மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
சென்னை, ஆக. 28- காசிமேடு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது அரசு பேருந்து மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகன் அசாருதீன் (32). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூமில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் புதன்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். காசிமேடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எண்ணூர் நோக்கி சென்ற அரசு பேருந்தின் (தடம் எண் 4) பின் சக்கரம் அசாருதீன் தலைமீது ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் அசாருதீன் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரக விளையாட்டு போட்டி.மாணவர்களுக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி,ஆக.28- ஓசூர் வடக்கு சரக அளவிலான தடகள போட்டிகள் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஓசூர் பேடரப் பள்ளி அரசு மாநகராட்சி நடு நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்றனர். நீளம் தாண்டுதலில் 8 ஆம் வகுப்பு மாணவர் ராஜ் முதலிடத்தையும், குண்டு எறிதலில் 2 ஆம் இடத்தையும் பிடித்தனர். 100 மீட்டர் ஓட்டத்தில் மாணவர் ஆஷிஷ் ஜீவன் 3 ஆம் இடத்தையும், 7 ஆம் வகுப்பு மாணவர் ஆரிபூல் 200 மீட்டர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பிடித்த னர்.
காலணி உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி, ஆக.28- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற் பூங்காவில் சுமார் ரூ.2.302 கோடி முதலீட்டில் 20 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணி உற்பத்திக்கான புதிய ஆலை செயல்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பணியில் சேர்வதற்கு காலணி தயாரிப்பு தொடர்புடைய பாடப் பிரிவுகளில் படிப்பதற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பட்டப்படிப்பு, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் இம்மாதம் 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 3 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் சேகரை எண்: 9025997996 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
480 பயனாளிகளுக்கு உதவிகள்
விழுப்புரம்,ஆக.28- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மதுரப்பாக்கம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சி. பழனி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது பல்வேறு துறையின் மூலம் 480 பயனாளிகளுக்கு 1 கோடியே 68 லட்சத்து 56 ஆயிரத்து 324 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.