மயிலாடுதுறை, ஜன.18- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி யில் தமிழ்நாடு அரசின் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்று பங்களிப்பு தொகை வழங்கியுள்ளது. தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் நமக்கு நாமே திட்டம் 2022-2023 கீழ் வளர்ச்சி பணி களை மேற்கொள்ள பங்களிப்புத் தொகையாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தரங்கம்பாடி ஆண்டனி ஐஸ் பிளாண்ட் நிறுவன உரிமையாளர் மற்றும் நிர்வா கத்தினர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கனிடம் வழங்கினர். பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, செயல் அலு வலர் கமலகண்ணன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.