இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதைக்கு எதிரான கையெழுத்தியக்கம் செங்கம் பேருந்து நிலையம் அருகே வட்டாரத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் முனுசாமி துவக்கி வைத்தார். பேரூராட்சித்தலைவர் சாதிக்பாஷா, செயல்அலுவலர் லோகநாதன், அரசு கூடுதல் வழக்கறிஞர் செல்வராஜ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காமத், கவுன்சிலர் முருகமணி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அப்துல் வாகித், வாலிபர் சங்க முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமணன், மாவட்டச் செயலாளர் சிஎம்.பிரகாஷ், மாவட்டத் தலைவர் சி.முருகன், சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செயலாளர் அப்துல் காதர், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கணபதி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.