பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட சென்னை பள்ளிகளுக்கான ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேயர் ஆர்.பிரியா செவ்வாயன்று (ஜன.31) ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப்சிங் பேடி, துணை ஆணையர் டி.சினேகா ஆகியோர் பங்கேற்றனர்.