districts

img

அண்ணாமலைப் பல்கலை.யில் நரிக்குறவர் பெண்களுக்கு இலவச கணினி பயிற்சி

சிதம்பரம், ஜூன் 8-

     சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகம் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, பழங்குடி யினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா உதவியுடன் சேலம், பெரம்பலூர் மாவட்டங்களிலுள்ள நரிக் குறவர் பெண்களுக்கு 3 மாத இலவச கணினி பயிற்சி யின் தொடக்க விழா பெரம்ப லூர் மாவட்டம் எறையூர் கிராமத்தில் நடைபெற்றது.

    சென்னை பழங்குடியி னர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை பயிற்சியை தொடங்கி வைத்து பேசு கையில், “இப்பயிற்சி நரிக் குறவர் இன பெண்க ளுக்கு பல்வேறு துறைக ளில் வேலை வாய்ப்பு களைப் பெற்றுத் தருவ தோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையை உரு வாக்க உதவுகிறது” என்றார்.

   கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவர் புவியரசன், அன்றாட வாழ் வில் கணினிகளின் முக்கி யத்துவத்தை எடுத்துரைத் தார். தற்போதைய சூழலில் தொழில்நுட்பத்தைக் கை யாள்வது கட்டாயமாகிறது. இதற்கு இந்த 3 மாத பயிற்சி வழி வகுக்கும் என்றார்.

   இதில் பூச்சியியல் துறைத்தலைவர் பேரா சிரியர் அறிவுடை நம்பி, பழங்குடியினர் சங்கத்தின் செயலாளர் ஜெய்சங்கர், டாக்டர் ரமேஷ் குமார், பழங்குடியினர் சங்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் ஜெயபிரகாஷ், பிரவீனா, சாய்லீலா, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.