சிதம்பரம், ஏப்.17- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக 84ஆவது பட்டமளிப்பு விழா பல்கலை கழக வளாகத்தில் திங்களன்று (ஏப்.18) நடைபெற உள்ளது. இதில் பல்கலைக்கழக வேந்தர் தமிழக ஆளுநர் ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகி யோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க வுள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் சீதா ராமன் உள்ளிட்ட நிர்வாகத்தினர் செய்துள்ள னர். முதல் முறையாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா மாலை நேரத்தில் நடைபெறுகிறது.