சென்னை,மார்ச் 25- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமையன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் பலவிதமான நாய்கள், கிளிகள் மற்றும் பறவைகள், பூனைகள், வெளிநாட்டு ஓணான் வகைகள், முயல்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் பொதுமக்கள் கண்காட்சிக்காக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். ஞாயிறு மாலை வரை கண்காட்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் செல்லப்பிராணி தொழில் வல்லுநர்கள், செல்லப்பிராணி பெற்றோர் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.