சென்னை, ஏப். 19 - குழந்தைகளுக்கு பரவும் காய்ச்சல் மற்றும் வெப் பத்தை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையங்க ளுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்க ளுக்கு 5 லட்சம் ரூபாயும் பணிக்கொடையாக வழங்க கோரி செவ்வாயன்று (ஏப்.18) தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி சென் னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.டெய்சி கலந்து கொண் டார். அப்போது செய்தியா ளர்களிடம் அவர் கூறியதா வது: 2 முதல் 5 வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. கோடை வெயில் கடுமை யாகி வருகிறது. எனவே, குழந்தைகள் மற்றும் பணி யாளர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை போன்று அங்கன்வாடி பணி யாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களுக்கு வழங்குவது போன்று ஒரு வருட மகப் பேறு விடுமுறை தர வேண் டும். சிலிண்டர் பில்லில் உள்ள முழுத் தொகையை யும் வழங்க வேண்டும். 30 ஆயிரம் காலிப்பணியிடங் களை விரைந்து நிரப்ப வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் உதவி யாளர்களுக்கு நிபந்தனை யின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், குறு மையத்திலிருந்து பிரதான மையத்திற்கு பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கு ஒரு சம்பள உயர்வு கூடு தலாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார். மாவட்டத் தலைவர் கள் சி.சாந்தகுமாரி (தென் சென்னை), தேவிபிரசன்னா (வடசென்னை) தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன், சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஹேமப் பிரியா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் கே.நிர்மலா, பொருளாளர் ஜி.தேவி (தென்சென்னை), யுவராணி (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர்.