districts

img

பராமரிப்பு இல்லா அங்கன்வாடி: ஆட்சியர் ஆய்வு!

விழுப்புரம்,ஏப்.21- விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியை மாவட்ட ஆட்சியர் த.மோகன் ஆய்வு செய்தார். கழிவுநீர் கால்வாய் இல்லாத பகுதிகளுக்கு நகராட்சியின் மூலம் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும், தினசரி வீதிகளை முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, சண்முக பெருமாள் தெருவில் அங்கன்வாடி மையம் செயல்படாமல் பராமரிப்பின்றி உள்ளதை பார்வையிட்டு, நகராட்சி நிர்வாகம் மூலம் உடனடியாக இக்கட்டிடத்தை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டுகொண்டு வர உத்தரவிட்டார். பின்னர், ஏரிக்கரை பகுதிக்கு சென்றார். அங்கு கல்லூரி சாலையில், வேகத்தடைகள் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளதால் அதிகம் விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடைகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.