சென்னை,ஜூன் 29-
அடையாறு, காந்தி நகர், 4-வது மெயின் ரோட்டில் 40 ஆண்டுகள் பழமையான மரம் இருந்தது. குடியிருப்பு அருகே இருந்த இந்த மரம் சரிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் இந்த மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அந்த மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டு அதன் கீழ்ப்பகுதியில் வேர் பாதிக்கப்படாமல் பிடுங்கப்பட்டது. பின்னர் அந்த மரத்தை கிரேனின் உதவியுடன் கோட்டூர்புரத்தில் மியாவாக்கி காடுகளுக்காக மரங்கள் பராமரிக்கப்படும் இடத்தில் நடப்பட்டது. புதிதாக நட்ட மரத்தின் வளர்ச்சியை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.