சென்னை, மார்ச் 3 – எழும்பூர் ரயில் நிலையம் எதிரே அங்கீகரிக்கப்பட்ட சாலையோர கடைகளை உடைத்து நாசப்படுத்திய அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சி யின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: எழும்பூர் ரயில் நிலை யம் எதிரில் ஹோட்டல் இம்பீரியல் முதல் ஹோட்டல் சங்கீதா வரை சாலை யோரத்தில் சுமார் 40 ஆண்டுகளாக பழம், பூ, ரெடிமேட் ஆடை போன்ற வற்றை வியாபாரிகள் வியா பாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு வணிக புகைப்பட அடையாள அட்டை வழங்கியுள்ளது. இந்நிலையில், மாநக ராட்சி 61 வார்டு உதவி செயற்பொறியாளர் மலர் விழி, எழும்பூர் காவல் ஆய்வாளர் திருமால் ஆகி யோர் வியாழனன்று (மார்ச் 2) எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடைகளை புல் டோசர் மூலம் இடித்து நாசப் படுத்தியுள்ளனர். வியாபாரத்திற்காக வைத்திருந்த பொருட்க ளையும் நொறுக்கி வாக னத்தில் எடுத்துச் சென்றுள் ளனர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்த வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ள னர். மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய சட்டவிரோத அராஜக செயல்பாட்டை வன்மையாக கண்டிக் கிறோம். இந்த அராஜகத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதி யில் வியாபாரிகள் தொடர் ந்து எவ்வித இடையூறும் இன்றி வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை யன்று (மார்ச் 4) எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.