districts

img

நோன்பு கஞ்சியோடு பல் செட்டை விழுங்கிய மூதாட்டி

சென்னை, மார்ச் 23- சென்னை வில்லிவாக் கத்தில் மூதாட்டி நோன்பு கஞ்சி குடிக்கும்போது பல் செட்டை விழுங்கியுள்ளார். சென்னை வில்லிவாக் கத்தைச் சேர்ந்த 93 வயதான மூதாட்டி ரஷியா பேகம். இவர் கடந்த புதன்கிழமை மாலை ரமலான் நோன்பை முடித்துக்கொண்டு நோன்பு கஞ்சி குடித்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த பல்செட்டும் நோன்பு கஞ்சியோடு சென்று உணவுக்குழாயில் சிக்கியுள்ளது. கொக்கி போன்ற வடிவமைப்பு கொண்ட அந்த பல்செட், உணவு குழா யில் சிக்கிக் கொண்டதால் வலியால் துடிதுடித்துப் போன மூதாட்டியை அவரது மகள் ஷாகீர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இருப்பினும், மூச்சு விடமுடி யாமல் எச்சில் விழுங்க  முடியாமல் அவதிப்பட்டுள் ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஏற்கெனவே குறைவான ரத்த அணுக்கள், ரத்தக் கொதிப்பு போன்ற இணை  நோயால் பாதிக்கப்பட்டி ருந்த அவரை, உள் நோயாளி யாக அனுமதித்த மருத்து வக் குழுவினர், அவருக்கு  பல்வேறு பரிசோதனை களை மேற்கொண்டுள் ளனர். பின்னர் மூதாட்டியின் உணவு குழாயில் சிக்கிக் கொண்டிருந்த பல் செட்டை  லாவகமாக மருத்துவர்கள் எடுத்தனர். சுமார் 4 மணி நேரம் மருத்துவர்கள் மேற் கொண்ட தொடர் சிகிச்சை யின்  பயனாக  மூதாட்டி தற்போது குணமடைந்து வருகிறார்.