திருவள்ளூர், ஜூன் 13-
லோட்டோ சாக்கோபை என்ற பன்னாட்டு தொழிற் சாலைக்குள் தொழிலா ளர் சட்டத்தை மதிக்காத போக்குள்ளது என சிஐடியு மாநில செயலாளர் இ.முத்துகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த நேமத்தில் தென்கொரியா நாட்டை சேர்ந்த லோட்டோ சாக்கோபை என்ற பன்னாட்டு நிறுவனம் கடந்த 13 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது.
இதில் 60 நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சங்கம் அமைத்ததற்காக சங்க நிர்வாகிகள் 4 பேரை சட்ட விரோதமாக ஆலை நிர்வா கம் பணிநீக்கம் செய்துள் ளது. இதனை கண்டித்து, கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் அனைத்து நிரந்தர தொழிலாளர்களும் 56 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சங்க உரிமை களை அளிக்க வேண்டும், லோட்டோ சாக்கோ பை வேலை நிறுத்த போராட் டத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியு றுத்தி செவ்வாயன்று (ஜூன் 13), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் அதன் மாநில செயலாளர் இ.முத்துக்குமார் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் என்.நித்தியானந்தம், கட்டுமான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ெஜ.ராபர்ட்எபிநேசர், ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரசேகரன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ் அரசு, பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் எம்.ராமசாமி, சிஐடியு மாவட்ட துணை நிர்வாகிகள் ஆர்.குப்பன், ஏ.பச்சையம்மாள், காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் அ.ெஜனிட்டன் ஆகியோர் பேசினர்.
இதில் சிஐடியு மாநில செயலாளர் இ.முத்துக் குமார் பேசுகையில்,“ லோட்டோ சாக்கோ பை என்ற பன்னாட்டு நிறுவனம் இந்திய நாட்டு சட்டத்தை ஏற்க முடியாது என்று சொல்லுகிறது”என்றார்.
இந்தியாவின் தொழி லாளர் சட்டங்களையோ, தொழிற்சங்க சட்டங்க ளையோ ஏற்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் கள் என்றும் கூறினார்.
லோட்டோ சாக்கோ பை நிறுவனத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்குமா நடக் காதா? என்பதை தான் சிஐடியு எழுப்ப கூடிய கேள்வியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள நீதியில் துறை அதிகாரி மீனாவிடம் மனு அளித்த னர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித் தார்.