வேலூர், ஜூன் 6-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை, அத்திமரத்துகொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி - பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை கடந்த 27ஆம் தேதி பாம்பு தீண்டியது. முறையான சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாததால், மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் சிறுமி பரிதாப மாக இறந்தார்.
இதையடுத்து அல்லேரிமலை அத்திமரத்துக் கொல்லை கிராம மக்களுக்கு சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அல்லேரி மலைக்கு ஆம்புலன்சை உடனடியாக வழங்க முதலமைச்சர் ஆட்சியருக்கு உத்தரவிட்டார். அதன்படி அல்லேரி மலை கிராமத்திற்கு சென்று வரும் வகையில் ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடிய சைத்து தொடங்கி வைத்து பேசுகையில், தினசரி மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் சென்று வர உத்தர விடப்பட்டுள்ளது. இதன் மூலம் அல்லேரி மலையில் உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கீழே அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இதனால் உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதம் தடுக்கப்படும் என்றார்.