districts

திண்டிவனத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம்

விழுப்புரம்,ஏப்.25- விழுப்புரம் மாவட்டம், திண்டி வனம் காந்தி சிலை அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அம்பேத்கார் பிறந்தநாள் கருத்தரங்கம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.கண்ணதாசன் தலைமை தாங்கி னார். வாலிபர் சங்க வட்டச் செயலாளர் சதீஷ்குமார் வர வேற்றார்.‘சிதைக்கப்படும் இந்திய அரசியல் அமைப்பும், சீரழியும் இந்திய ஜனநாயகம்’ என்ற தலைப்பில் பொது கல்விக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு உரையாற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளர் எஸ் சவுரி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன், சிபிஎம் வட்டச் செயலாளர் டி.ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பூபால், அம்பேத்கர் மக்கள் கட்சியின் மழை மேனி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.