சென்னை, ஜன. 2 - திருவெற்றியூர் தொகுதிக்்குட்பட்ட அரிவாக்குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில் வீடுகளை இழந்த 17 குடும்பங்்களுக்கு புதிய குடியிருப்புகள் வழங்கப்பட்டன. திருவொற்றியூர் அரிவாக்்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் டிச.27 அன்று இடிந்து விழுந்தது. இதில்28 குடும்பங்கள் வீடுகளை இழந்்தன. வீடுகளை இழந்த குடும்பங்்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்்தின் சார்பில் கட்டப்பட்டபுதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்்கீட்டு ஆணைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் அறிவித்தபடி, வீடுகளை இழந்த 28 குடும்பங்்களில் 17 குடும்பங்கள் மாற்று வீடுகள் பெற ஒப்புக் கொண்ட அடிப்படையில் 17 குடும்பங்க ளுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்க ப்பட்டுள்ளது. இதில் 9 குடும்பங்க ளுக்கு ஆல் இந்தியா ரேடியோ எர்ணாவூர் திட்ட பகுதியிலும், 9 குடும்பங்களுக்கு என்.டி.ஒ குப்பம் திட்ட பகுதியிலும் மாற்று வீடுகள் வழங்கப்படுள்ளது. பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிதாக கட்டப்படவுள்ள குடியிருப்பில் ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று 11 குடும்பங்கள் கோரியுள்ளனர். மறு கட்டுமானம் முடியும் வரை வாடகைக்கு இருக்கும் காலத்திற்கு அரசு தருகின்ற கருணை தொகை 24,000 ரூபாய் நிதி வழங்கப்படும். தரக்கட்டுபாடு குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அத்திட்ட பகுதியில் உள்ள மீதமுள்ள 308 வீடுகளில் வாழும் குடும்பங்கள் படிபடியாக காலி செய்து கொடுத்தால் அப்பகுதியிலேயே நல்ல தரத்துடன் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கலாநிதி வீராசாமி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், கே.பி.சங்கர், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.