districts

img

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவி தொகை வழங்க வேண்டும் அம்பத்தூர் மாநாடு வலியுறுத்தல்

சென்னை, நவ. 24- விண்ணப்பிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி தொகை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் அம்பத்தூர் மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அம்பத்தூர் பகுதி முதல் மாநாடு ஜெ.ரவி தலைமையில் ஞாயிறன்று (நவ.  24) நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.ராணி மாநாட்டை துவக்கி வைத்தும்  ஜலஜா (கட்டுமான சங்கம்) வாழ்த்தியும் பேசினர்.  முன்னதாக தண்டபாணி வரவேற்றார். பாலுமணி நன்றி கூறி னார். தீர்மானங்கள் வீடட்றவர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்க வேண்டும், பகுதி வாரியாக மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர சிறப்பு கூட்டங்கள் நடத்த வேண்டும், முறையாக அளவீடு செய்து உரிய மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதிக்குழு தேர்வு 13 பேர்  கொண்ட பகுதிக்குழுவின் தலைவராக தண்ட பாணி, செயலாளராக ஜெ.ரவி, பொருளாளராக பாலு மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.