திருவொற்றியூர் 4ஆவது வார்டில் 25 சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு
சென்னை, டிச. 19- திருவொற்றியூர் 4ஆவது வார்டில் 3.35 கோடியில் 25 சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய மண்டலக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் வார்டுக்குழு கூட்டம் மண்டலத் தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது. இதில் 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருவொற்றியூர் மண்டலம் முழுவதும் ரூ.26 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகள், பேவர்பிளாக் சாலைகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 3.55 கோடி ரூபாய் 4ஆவது வார்டில் 25 சாலைகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பேசுகையில், 4ஆவது வார்டில் விடுபட்ட45 சாலைகளில் தார் சாலைகள் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஜெய்ஹிந்த் நகரில் சேதமடைந்த மின் கம்பங்களை உடனே மாற்ற வேண்டும். மேல்நிலை கம்பிகளை புதைவட கேபிள்களாக மாற்றித் தரவேண்டும். பொங்கலுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. குறிப்பாக முல்லை நகருக்கு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்றார். இதற்கு பதிலளித்த வட்டாச்சியர் சகாயமேரி 80 சதம் மட்டுமே அனுப்புகிறார்கள். அதுவும் சிவில் சப்ளை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் கணக்கின் அடிப்படையிலேயே அனுப்புகிறோம். சில இடங்களில் தவறுகளும் நடைபெறுகிறது. அவற்றை சரி செய்து அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர், முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வப்போது பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பாடாத வண்ணம் பராமரிக்க வேண்டும். வி.பி. நகரில் பாதாள சாக்கடை பணிகளை உடனே துவக்க வேண்டும். மணலி விரைவு சாலையில் எர்ணாவூர் மேம்பாலம் - சத்தியமூர்த்தி நகருக்கு இடையே குறுக்கே செல்ல பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். கூட்டத்தில் மண்டல அலுவலர் புருஷோத்தமன், உதவி சுகாதார அலுவலர் டாக்டர் லீனா, செயற்பொறியாளர்கள் உசைன், பாபு, வருவாய் அலுவலர் அர்ஜுன், குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் வேணுகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இட்லி மாவில் எலி மருந்து கலந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிதம்பரம், டிச.19- காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் செட்டி தாங்கல் கிராமத்தில் டிபன் மற்றும் டீ கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு அருகிலேயே கீழக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் அதே போல் கடை நடத்தி வந்தார். வெங்கடேசன் கடையில் வியா பாரம் குறைவாக இருந்துள்ளது. சுந்தரம் கடையில் வியாபாரம் அதிகமாக இருந்துள்ளது. இதனால், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சுந்தரம் கடைக்கு சென்ற வெங்கடேசன், இட்லி மாவில் எலி மருந்தை கலந்துள்ளார். அதை கண்டுபிடித்த சுந்தரம், காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வெங்கடே சனை கைது செய்தனர். சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் கடைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக வெங்கடேசனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ1000 அபராதம். மாவில் விஷம் கலந்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து இதை ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
வேலூரில் சிறுத்தை தாக்கியதில் இளம் பெண் பலி
வேலூரில் சிறுத்தை தாக்கியதில் இளம் பெண் பலி வேலூர், டிச. 19 - வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ஊராட்சி கொல்லை மேடு துருவப் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவலிங்கம் (70). இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். 5வது மகள் அஞ்சலி (22). இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். தமிழ்நாடு ஆந்திர எல்லையை ஒட்டிய வனப்பகுதியில் அமைந்துள்ளது இந்த கிராமம். டிச.18 அன்று வீட்டின் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றார். அப்போது,திடீரென அங்கு வந்த சிறுத்தை அஞ்சலியை தாக்கி கொன்றது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்ட சத்தம் கேட்டு சிறுத்தை தப்பி ஓடியது. அங்கு சென்ற உறவினர்கள் அஞ்சலி சடலமாகவும் கை துண்டாகி கிடந்ததை கண்டு கதறி அழுதனர். பின்னர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கோட்டாட்சியர் சுப லட்சுமி தலைமையில் வனம், வருவாய் மற்றும் கே.வி. குப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அஞ்சலியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்ப முயன்றனர். அப்போது, உடலை எடுக்க விடாமல் அப்பகுதி மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், வன அலுவலர் குருசாமி பாலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். எங்கள் குடியிருப்பு பகுதிக்குள் வன விலங்குகள் வராதவாறு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அனைத்து கோரிக்கை களையும் நிறைவேற்றுவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து அஞ்சலியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். இந்நிலையில் அஞ்சலியை தாக்கி கொன்ற சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்து அதனை கூண்டு வைத்து பிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை பிடித்தவுடன் வனப்பகுதியை ஒட்டி கிராமங்களில் தடுப்பு வேலி அமைக்கப் படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் பேனர்கள் அகற்றம்
விழுப்புரம், டிச.19- விழுப்புரம் புதிய பேருந்து நிலையப் பகுதி யில் வைக்கப் பட்டிருந்த பேனர்களை நகராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக அகற்றினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் மற்றும் தலை வர்கள் மத்தியில் போட்டி போட்டுக்கொண்டு பேனர் வைத்தனர். இதன் விளைவாக ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பலி யான சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் பேனர்கள் வைப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பேனர் வைப்பதை தவிர்த்து சுவர்களில் பேனர்களை ஒட்டி வந்தனர். இந்த கலாச்சாரம் மிக வேகமாக பரவி வந்த நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே பயணி கள் நிழற்குடையை விட்டு வைக்காமல் அரசியல்பிர முகவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பேனர்களை ஒட்டினர். இதில் இந்திய ஜன நாயக கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் ஆதவன் அறிவு பிறந்தநாளை முன்னிட்டு, நகராட்சி அனுமதி பெற்று பேனர் ஒட்டி இருந்தாக தெரிகிறது. இந்நிலையில் அந்த பேனரை நகராட்சி நிர்வாகம் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி புதன்கிழமை அகற்றினர்.