விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரே ரயில் பணியை தொடங்குக
சென்னை, ஜன.6- கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு மக்கள் சென்று திரும்ப வசதியாக விமான நிலைய மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரை நீடிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- கிளாம்பாக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட புதிய பஸ் நிலையம், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையான நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம் -கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர் வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது தான்.கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பது என முடிவெடுக்கப்பட்ட போதே, ஏற்கனவே விமான நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ தொடர்வண்டிப் பாதையை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு விட்டன. எனவே, விமான நிலையம் -கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பணிகளை தொடங்கி விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேம்பட்ட தொழில்நுட்பத்தில் விவோ புதிய ஸ்மார்ட்போன்
சென்னை, ஜன.6- விவோ நிறுவனம் தனது எக்ஸ் மாதிரிவரிசையில் அவ்வப்போது பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது எக்ஸ்100 புரோ மற்றும் எக்ஸ்100 ஆகிய 2 ஸ்மார்ட்போன்களை ஜெய்ஸ் நிறுவனத்து டன் இணைந்து இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மொபைல் புகைப்பட அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் அதிநவீன மென்பொருள் மற்றும் வன்பொருள் உடன் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளன. விவோ மற்றும் ஜெய்ஸ் ஆகியவற்றின் இணை - பொறியியல் தொழில்நுட்பமானது கேமரா சென்சார்களின் ஆதரவுடன் 100 மடங்கு வரை படங்களை பெரிதாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறில் குடிநீர் நிறுத்தம்
சென்னை,ஜன.6- சென்னை தியாகராய நகர் வெங்கட் நாராயண சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ப்படுகிறது. அதனால் 8-ந்தேதி காலை 6 மணி முதல் 9-ந் தேதி காலை 6 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடை யாறு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டியஅளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரக் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள இணைய தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எவ்வித தடையின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
காவலர் பயிற்சி நிறைவு
திருவள்ளூர், ஜன.6- திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு காவல்துறை பணிக்கு தேர்வான 429 காவலர்களுக்கு கடந்த 8 மாதங்களாக திருவள்ளூரை அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற பயிற்சி நிறைவடைந்தது.
தென்மாவட்ட பெருவெள்ள பாதிப்பு சிறு வணிகர்களுக்கு ஓராண்டுக்கு வட்டியில்லா கடன் வழங்க கோரிக்கை
சென்னை, ஜன. 6- கூட்டுறவு வங்கி மூலம் சிறு வணிகர்க ளுக்கு ஓராண்டுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமைச்செயலாளர் சிவ்தாஸ்மீனாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பர் 16, 17 தேதிகளில் தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகன மழை காரணமாக வரலாறு காணாத வகையில் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்டு, அதனால் பொதுமக்கள் வணிகர்கள், உட்பட பல்வேறு தரப்பினர் மிகப்பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு கீழ்காணும் பேரமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும். நிலுவையில் உள்ள இ.எம்.ஐ கடன்களை அபராத வட்டியின்றி ஓராண்டுக்கு தள்ளிவைக்க வேண்டும், வணிகர்களுக்கு வட்டியில்லா கடனாக குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் பிணை யின்றி வழங்க வேண்டும், வெகுவாக பாதிக்கப்பட்ட ஆத்தூர், ஏரல், புண்ணை காயல், காயல்பட்டிணம், நாசரேத், நுணைஞ் சுபட்டி, முக்காணி, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், குரும்பூர் போன்ற பகுதி களை சார்ந்தசிறு மற்றும் பெரு வணிகர் களுக்கு நிதிஉதவியும், நிவாரண உதவிகளும் உடனடியாக வழங்க வேண்டும். தொழிற்சாலைகள், ஜவுளி நிறுவனங் கள், ஆயத்தஆடை வணிகர்கள், அரிசி மற்றும் பலசரக்கு மளிகை வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பெருவெள்ளத் தால் அதிகளவு பாதிக்கப்பட்டு, 10 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டிருக்கி றது. உரிய கணக்கீடு செய்து நிவாரணங் களும், நிதி உதவிகளும் வழங்கப்பட்டால் தான் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வணி கத்தையும், தொழிலையும் துவங்கி நடத்த ஆதாரமாய் அமையும். பாதிப்புக்குள்ளான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகக் குடும்பங்கள், பணி செய்யும் ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் வீடு இழந்தவர்களை கணக்கீடு செய்து நிவாரண உதவி வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி மூலம் சிறு வணிகர் களுக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஓராண்டுக்கு வட்டியில்லா கடனாக அளித்து உதவ வேண்டும். பேரிடர் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பாதநிலை இருப்பதை கவனத்தில் கொண்டு, அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வணிகர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, பொதுமக்கள் சேவையை தொடர்வதற்கான செயல்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இல்லாததால் பெண் உயிரிழப்பு
புதுச்சேரி அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை
புதுச்சேரி, ஜன.6- வில்லியனூர் அரசு மருத்துவமனையை ஒரு வாரத்துக்குள் தரம் உயர்த்தா விட்டால் போராட்டம் நடத்துவோம் என்று புதுச்சேரி அரசுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இல்லாத காரணத்தால் கடந்த 3-ம் தேதி சிகிச்சைக்கு வந்த கணுவாய் பேட்டையை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி வள்ளி (40) உயிரிழந்தார். இது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ஊர் பிரமுகர்களுடன் சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவை (ஜன.5) சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- புதுச்சேரி நகரத்துக்கு அடுத்த பெருநகரமாக விளங்கும் வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் மருத்துவ சேவைக்காக வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் விரிவுபடுத்தப்பட்டு இருந்தாலும், அங்கு போதிய மருத்துவர்கள் இல்லை, ஆம்புலன்ஸூக்கு ஓட்டுநர் இல்லை. இரவு நேரங்களில் மருத்துவர்கள் சரியாக பணியில் இல்லை. இங்கு தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். ஆனால், வில்லியனூரில் பணியாற்றிய மருத்துவர்கள் ஒரே நேரத்தில் மாற்றிவிட்டு அனுபவம் இல்லாத பயிற்சி மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்துள்ளீர்கள்.இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற அஞ்சுகின்றனர். இன்னும் ஆம்புலன்ஸூக்கு ஓட்டுநர்கள் நியமிக்கவில்லை. போதிய மருந்துகள் இருப்பு இல்லை. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் பதிவு சீட்டு கூட இல்லாத அவல நிலையில் தொடர்ந்து மருத்துவமனை இயங்குகிறது. ஆண்டுக்கு ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்சுகளுக்கு சம்பளம் இல்லை, ஆம்புலன்ஸ் இல்லை, அதற்கு ஓட்டுநர் இல்லை. செவிலியர் பற்றாக்குறை போன்றவற்றால் தினந்தோறும் சிகிச்சைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் இறக்க நேரிடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த இயக்குநர் ஸ்ரீராமுலு, “இன்னும் ஒரு வாரத்துக்குள் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படும். தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “ஒரு வாரத்துக்குள் வில்லியனூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தா விட்டால் போராட்டம் நடத்துவோம்” என்று குறிப்பிட்டார்.
வழிப்பறி: வாலிபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
விழுப்புரம்,ஜன.6- விக்கிரவாண்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி தனியார் கல்லூரி அருகே சென்ற பெண்ணிடம் மூன்று சவரன் தங்கச் செயினை பறித்து சென்ற விக்கிரவாண்டி அருகே ஆர்.சி.மேலக்கொந்தை கிராமம், காமராஜர் தெருவை சேர்ந்த மதன்குமார் மீது காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சியர் பழனி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து, கடலூர் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
உலோக உருவாக்கம் உற்பத்தி கண்காட்சி
சென்னை, ஜன. 6- இந்திய எந்திரக் கருவி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் 8வது ஆண்டாக ‘ஐஎம்டெக்ஸ் பார்மிங்2024’ என்னும் ஆசியாவின் முதன்மையான உலோக உருவாக்கம் – உற்பத்தி கண்காட்சி பெங்களூரில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் வரும் 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் எந்திரக் கருவி பாகங்கள், உலோகத்தை உருவாக்கும் கருவிகள், டை அன்ட் மோல்ட், அளவியல், கேட், கேம், டிஜிட்டல் உற்பத்தி, சேர்க்கை உற்பத்தி மற்றும் தொழில்துறையில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்து சாதனங்கள் காட்சிப்படுத்தப்படும். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் வெல்டிங் உடன் இணைந்து இந்த கண்காட்சியை இந்திய எந்திரக் கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்துகிறது. இந்த கண்காட்சியில் 18 நாடுகளை சேர்ந்த 500 நிறுவனங்கள் அரங்குகளை அமைக்க உள்ளன. இந்த அரங்குகள் மொத்தம் 45 ஆயிரம் சதுர மீட்டரில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம்,ஜன.6- 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர் களுக்கு தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1,00,000 விழுக்காடு பணமுடிப்பும் வழங்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த மூன்று தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான, விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய றறறinயீஉb.படிஎ.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல் தேவைப்படுவோர் விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.