districts

img

தி.நகரில் ஆகாய நடை மேம்பால பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

சென்னை,மே 17- தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஆகாய நடை மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிர மாக நடந்து வருகிறது. சென்னை தி.நகரில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் மாம்பலம் ரயில் நிலையம் தியாகராய நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் பொது மக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையிலும் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மாம்பலம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக ரயில்வே நடை மேம்பாலத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, ரயில்வே பார்டர் சாலை மற்றும் மேட்லி சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து நிலையம் வரை 600 மீட்டர் நீளத்தில், 4 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தப்பணிகள் மிக தாமத மாக நடந்துவந்தது. பணி களை விரைவுபடுத்தி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிக ளுக்கு நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. தியாகராய நகர் பேருந்து நிலையம் மற்றும் அதன் எதிர்புறம், மாம்பலம் ரயில் நிலையம் ஆகிய இடங்களின் வழியாக இந்த ஆகாய நடை மேம்பாலத்தை பொது மக்கள் சென்று அடைய லாம். தி.நகரில் கட்டப்பட்டு வரும் இந்த நவீன ஆகாய நடை மேம்பால பணிகள் இன்னும் ஓரிரு மாதத்தில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.