districts

img

100 நாள் வேலைத்திட்டத்தில்  பணி வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத்திட்டத்தில்  பணி வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் அனந்தபுரம் ஊராட்சியில் நடைபயணம் மற்றும்  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போளூர் தாலுகா தலைவர் சரவணன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் பி.கணபதி, கே. கே. வெங்கடேசன், சிஐடியு மாவட்ட தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.