அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிடக் கோரி புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ மாநிலச் செயலாளர் ஆ.மு.சலீம் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், விசிக முதன்மை செயலாளர் தேவ.பொழலன், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் மாநில செயலாளர் சோ.பாலசுப்பரமணியன் மற்றும் பலர் பேசினர்.
இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி கடலூரில் சிபிஎம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செயலாளர் ஜி.மாதவன் உரையாற்றினார்.
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்னிபாத் திட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பண்ருட்டியில் போராட்டம் நடத்தினர்.
அக்னிபாத் திட்டத்தை திரும்பப்ப பெறக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செம்மலர், மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி, மாவட்ட துணைச் செயலாளர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.