districts

சென்னை முக்கிய செய்திகள்

வட சென்னையில் நாளை மறுநாள்   குடிநீர் விநியோகம் நிறுத்தம்  சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை, ஜன. 25- வட சென்னையில் வரும் 28ஆம் தேதி  திரு வொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையா ர்பேட்டை, திருவிக நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் குடிநீர் வினி யோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: புழலில் அமைந்துள்ள 300 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலை யத்தின் பிரதான குழாய்களில் நீர் அளவிடு கருவிகளைப் பொறுத்துவதற்கான பணி கள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே திருவொற்றியூர் மண்டலத்தில் தாழங்குப்பம், நெய்தல் நகர், ராமசாமி நகர், கத்திவாக்கம் உள்ளிட்ட  பகுதிகளிலும், மணலி மண்டலத்தில் மணலி நியூ டவுன், கொசப்பூர், எம்எம்டிஏ மாத்தூர், சின்ன சேக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும், மாதவரம் மண்டலத்தில் தணிகாசலம் நகர், வட பெரும் பாக்கம், தீயம்பாக்கம் உள்ளிட்ட பகுதி களிலும், தண்டையார்பேட்டை மண்டலத் தில் வியாசர்பாடி, படேல் நகர், கொருக்குப் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், திருவிக நகர் மண்டலத்தில் கொளத்தூர், பேர வள்ளூர், பெரம்பூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும், அம்பத்தூர் மண்ட லத்தில் கள்ளிகுப்பம், கொரட்டூர், ஓரகடம், அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ரோடு,  முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலும் 28ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அகர்வால்  கண் மருத்துவமனை பங்கு வெளியீட்டில் இறங்கியது

சென்னை,ஜன.25- சென்னையை தலைமையிடமாகக் கொண்ட டாக்டர். அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட் நிர்வாகம் இந்தியா வில் கண் பராமரிப்பு சந்தையில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந் நிறுவனம் 3ஆயிரத்தி62 கோடி ரூபாயை திரட்ட உள்ளது, பொது பங்கு வெளியிட்டில் ₹300 கோடி முதன்மைத் திரட்டலும்  இதில் அடங்கும்.  மீதமுள்ள ரூ.2,762 கோடி தற்போதைய பங்குதாரர்களின் இரண்டாம் நிலை விற்பனையிலிருந்து திரட்டப்படும். சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, டாக்டர் அகர்வால் ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவன அதிகாரிகள்,பங்கு விற்பனை வருவாயில் சுமார் ரூ.195 கோடி மொத்தக் கடனைக் குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் என்றனர். தற்போது அந்த கடன் ரூ.373 கோடியாக உள்ளது.  பங்கு விற்பனை வரும் 29 அன்று தொடங்கி ஜனவரி 31 அன்று முடிவடைகிறது.  “எங்களிடம் தற்போது 209 மருத்து வமனைகள் உள்ளன. கடந்த ஆண்டு 45 கண் மருத்துவ மனைகளை தொடங்கினோம், இந்த ஆண்டு மேலும் 30 கண் மருத்துவமனைகளை திறந்துள்ளோம். சராசரியாக, ஒவ்வொரு வாரமும் ஒரு மருத்துவமனையைத் திறக்கி றோம்,” என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அமர் அகர்வால் கூறினார்.

சென்னையில் தொழில்முனைவோர் கலந்துரையாடல் 

சென்னை,ஜன,25- டிஐஇ சென்னை என்பது தொழில்முனைவோருக்கான உலகளாவிய இலாப நோக்கற்ற அமைப்பாகும்.  சென்னையை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு  தொழில் முனைவோருக்கு கலங்கரை விளக்கமாக உள்ளது. தொடக்கநிலை தொழில்முனைவோர், தொடர் தொழில் முனைவோர் மற்றும் முன்னணி நிறுவனங்களில் உள்ள தொழில் வல்லுநர்கள் முதல் முதலீட்டாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மற்றும் சிந்தனைத் தலைவர்கள் வரை அனைவரையும் ஒரு சேர இணைக்கிறது.  மாற்றத்திற்கான பயணத்தை ஆராயவும் மற்றும்  தொழில்முனைவோரின் எதிர்காலத்திற்கான பார்வையை பட்டியலிடவும்  “தி லெகசி ஆஃப் டை சென்னை டிரா ன்ஸ்ஃபார்ம்” என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு சென்னை யில் சனிக்கிழமை நடைபெற்றது.   சாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கே.வி.ரமணி, எலி வார் ஈக்விட்டியின் மூத்த ஆலோசகர் ஆர்.ராமராஜ், காக்னி சென்ட் முன்னாள் துணைத்தலைவர  லக்ஷ்மி நாராயணன், தொழில்முனைவோர் நாராயணன்,கவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதன் உள்பட பலர் பேசினர். குழு உறுப்பி னர்கள் தங்களுடைய விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளைப் பகிர்ந்து  கொண்டனர். டை சென்னையின் உருமாற்றப் பய ணத்தை மறுபரிசீலனை செய்தனர்.

சென்னையில் சாலை போடும் பணி  மீண்டும் துவக்கம் : மேயர் பிரியா

சென்னை,ஜன,25- சென்னை ஜமாலியாவில் நெகிழி குப்பையை தவிர்த்தல் குறித்தான விழிப்புணர்வு பேரணியை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகள் கலந்துகண்டு நெகிழி குப்பையை தவிர்க்க வேண்டும் என்று கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா  மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து  கொண்டனர். பின்னர் செய்தியாளர் களிடம் மேயர் பிரியா கூறியதாவது:- சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலங்களிலும் மாசு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் நோக்கமாக இன்றைக்கு 15 மண்டலங்களிலும் பிளாஸ்டிக்கை எப்படி தவிர்ப்பது, அதை எப்படி ஒழிப்பது குறித்து பள்ளி மாணவர்களோடு நடைப்பயணம் துவங்கப்பட்டு இருக்கிறது. சென்னை முழுவதுமாக 15 மண்டலங்களிலும் பேரணி தொடர்ந்து நடைபெற உள்ளது. பிளாஸ்டிக்கால் எந்த அளவு மாசு படுகிறது என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகை யில் ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமை நான்காவது வாரம் இந்த பேரணி தொடர்ந்து ஆண்டு முழுவதும் நடை பெறும். அடுத்த தலைமுறைக்கு சமுதா யத்தை பாதுகாப்பது நம்முடைய கடமை. குப்பைகளும் எப்படி சேகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் குப்பை களை போடுவதற்கு மெரினா, பெசன்ட்  நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தனி குப்பை தொட்டி வைக்கப்பட்டி ருக்கிறது. இது ஒவ்வொருவரிடமும் மாற்றம் கொண்டு வரும். தனி மனிதனின் மாற்றம் தான் சமுதாயத்தின் மாற்ற மாக இருக்கும். பிளாஸ்டிக் பயன் படுத்து வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு போடக்கூடிய சாலைகள் மழை காரண மாக சில பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய சூழல் இருந்தது. அந்த பணிகள் மீண்டும் துவக்கப்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சி கொண்டு வந்த திட்ட மாக இருந்தாலும் அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அதற்கு தனியாக நிதி ஒதுக்கி பரா மரிப்பு பணிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புயல் மழையால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

விழுப்புரம்,ஜன.25- பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.   மா கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் பி.குமார் தலைமையில் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கணக்கெடுப்பு முடிந்தும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல் மறு ஆய்வு என்ற பெயரில் காலம் தாழ்த்துவது சரியான நடவடிக்கை இல்லை. எனவே, மீண்டும் கணகெடுப்பு நடத்துவது கைவிட்டு, புயல், மழையால் பாதிக்கப்பட்ட உடன் எடுத்த கணக்கெடுப்பு படி உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டை நகராட்சியில்  புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

ராணிப்பேட்டை, ஜன. 25 –  ராணிப்பேட்டை நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் அரசு நிதி மற்றும் கோர மண்டல் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை வெள்ளி யன்று (ஜன. 24) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார். நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 10 லட்சம் மற்றும் கோர மண்டல் நிறுவன சி.எஸ்.ஆர் நிதி ரூ.5 லட்சம், நகராட்சி பொது நிதி ரூ. 4 லட்சம் என மொத்தம் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து சமூக பங்களிப்பு நிதி வழங்கியமைக்காக கோரமண்டல் நிறு வனத்தினருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தல், நினைவுப் பரிசு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பி னர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், நகர்மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் சீம. ரமேஷ் கர்ணா, திட்ட  அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் வசந்தி ஆனந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அம்சப்ரியா,  நகராட்சி பொறியாளர் பரமு ராசு, உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.