districts

பணி நீக்கத்தை எதிர்த்து மக்கள் தொலைக்காட்சி ஊழியர்கள் வழக்கு

சென்னை, செப்.1 மக்கள் தொலைக்காட்சியில் பணி யாற்றிய 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜூலை 31 ஆம் தேதியுடன் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர்.  முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்வது சட்ட விரோதமானது என்றும், தொழில் தகராறு சட்டத்தின் படி ஆட்குறைப்பு இழப்பீடு வழங்கப்பட  வேண்டும் என்றும் அந்த தொலைக் காட்சியின்  சீனியர் அசோசியேட் எடிட்டரும்  சென்னை பத்திரிகையாளர் யூனியன் பொதுச்செயலாளருமான மணிமாறன் இதர ஊழியர்களுடன் சென்று   தலைமைச்  செயல் அதிகாரியை சந்தித்து வலியுறுத் தினார்.   உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம், தொழில் தகராறு சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில்… பணி நீக்கம் குறித்து தொழி லாளர் துறைக்கு தெரிவித்து நிர்வாகம் முன் அனுமதி பெற வேண்டும்; ஊழியர்க ளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு  (நோட்டீஸ்) கொடுக்க வேண்டும்.  ஆட்குறைப்பு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவை எதையுமே மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம் செய்யவில்லை. மக்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தின் சட்டத்துக்குப்  புறம்பான, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எம்.யு.ஜெ. பொதுச்செயலாளர் மணிமாறன் உட்பட 19 ஊழியர்கள் தொழிலாளர் துறை யில் புகார் அளித்துள்ளனர். செப். 12 ஆம்  தேதி இந்த  மனுக்கள் மீது விசாரணை நடைபெற உள்ளது.  எனவே  தமிழக அரசும்  தொழிலாளர் நலத்துறை ஆணையரும் ஊழியர்கள் அளித்துள்ள புகார் மனுக்களை  விரைவாக விசாரித்து, சட்டப்படியான இழப்பீடுகளை பெற்றுத்தர வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் யூனியன் வலியுறுத்தியுள்ளது.