ராணிப்பேட்டை,மே 7 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த விடியல் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் வாலாஜா ஆசிரியர் சங்க கட்டிடத்தில் செவ்வாயன்று (மே.7) நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு பழங்குடி ஆன்றோர் பேரவை உறுப்பினர் இரா. சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பழங்குடி யின மக்களின் வாழ் வாரத்தை மேம்படுத்த தையல், செங்கல் சூளை உள்ளிட்ட 11 வகையான சுய தொழில்கள் துவங்க ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வழங்கப்படும் அரசு கடன் உதவி குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கொத்த டிமை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்த வேண்டும், வறுமை ஒழிப்பு திட்டம், கிராமப்புற கடன் உதவி திட்டங்கள் போன்ற தமிழக அரசின் விடியல் திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் தரணி, ஜனரஞ்சனி, ஷோ பனா, நாகராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, மாவட்ட செயலாளர் எல்.சி. மணி ஆகியோர் பேசினர். இறுதியாக மலை வாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் கே. சேகர் கூட்டத்தை நன்றி கூறினார்.