புதுச்சேரி, மே 15-
புதுச்சேரி அரசு கல்லூரிகளில் மாண வர் சேர்க்கையை காலம் தாழ்த்தாமல் உட னடியாக துவங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரமாகிறது. தற்போது வரை இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அரசிடமிருந்து எந்த அறி விப்பும் வரவில்லை. ஆனால், அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் மே 1ஆம் தேதி முதல் கலை அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் அந்தந்த கல்லூரிகளில் விநி யோகிக்கப்படுகிறது.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது நடை பெறும் என்றும் அறிவித்து விட்டனர். தமிழ்நாட்டை விட மிக குறைவான மாண வர் எண்ணிக்கையை கொண்ட, புதுச்சேரி யில் தற்போது வரை அதற்கான தயாரிப்பு கள் ஏதும் செய்யப்பட்டதாக தெரிய வில்லை.
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர் சேர்க்கையில் பல குழப்பங்கள் ஏற்படுவதால் மாணவர்கள், பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதன்மூலம் மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நோக்கி செல்லும் பணியை புதுச்சேரி அரசே ஒவ்வொரு ஆண்டும் செய்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நடவடிக்கை தனியார் கல்வி வியா பாரிகள் மீது அரசு கொண்டுள்ள அதீத பாசத்தை வெளிப்படுத்துகிறது.
அந்த வகை யில் இந்த ஆண்டும் தனியார் கல்வி நிறு வனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மாண வர் சேர்க்கையை துவங்கியுள்ளனர். மேலும் அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வராத தால் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளை களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.
தங்களது பிள்ளைகளை தனியார் கல்லூரிகளில் அதிக பணம் கட்டி மாண வர்களை சேர்த்து விடும் அவல நிலை தொடர்கிறது. இதில் பணம் கட்ட முடி யாமல் பல மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் இடைநிற்றல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கல்வி ஆண்டின் இறுதியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை அரசு முடிப்ப தால் பேராசிரியர்களாலும் பாடம் முடிக்க முடியாமல் குறுகிய காலத்தில் மாண வர்கள் பருவத் தேர்வை எதிர்கொள்வதால், பல மாணவர்களால் தேர்ச்சியடைய முடி யாத சூழல் நிலவுகிறது.
அரசின் இத்தகைய சரியான திட்டமிடல் இல்லாத தால் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த அவல நிலையை போக்க ஏழை-எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க புதுச்சேரி அரசும் உயர்கல்வித் துறையும் உடனடியாக சரியான திட்டமிடலுடன் கல்லூரியில் மாண வர் சேர்க்கையை துவங்கி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.