கடலூர் மாநகராட்சிக் குட்பட்டது செல்லங் குப்பம். இங்குள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 117 மாணவர்கள் படித்து வருகின்ற னர். 1910 களில் துவங்கப்பட்ட இந்த பள்ளி நூற்றாண்டு கடந்தும் போது மான கட்டிட வசதி இல்லை. இடவசதி யும் கிடையாது. இதனால் ஆசிரி யர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு நகர மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வி. சுப்புராயன் கோரிக்கையை ஏற்று நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகும், இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போது மான போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. போதுமான வகுப்பறை வசதி இல்லாமல் மிகப் பழமையான கட்டிடத்தில் படித்து வந்தனர். அதன்பின்னர், பெற்றோர்-மாணவர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, ஆபத்தான இந்த கட்டிடத்தை இடித்தனர். தாட்கோ மூலம் கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்யப்பட்டது. தரை தளத்தில் மூன்று வகுப்பறைகளும் முதல் தளத்தில் மூன்று வகுப்பறை களும் கட்டுவதற்கான திட்டம் தயார் செய்து 2017-2018 ஆம் ஆண்டில் கட்டுமான பணிகளை துவங்க ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டது. பணிகள் துவங்கி 6 ஆண்டுகளை கடந்தும் முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மழை, வெயில் காலங்களில் மரத்தடி மற்றும் முழுமை அடையாத கட்டிடத்திற்குள் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் டி. ஜான் கூறும் போது, “ ஆசிரியர்களை கொண்ட செல்லங்குப்பம் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் 117 மாண வர்கள் படிக்கின்றனர். தற்போது இரண்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. அதுவும் மிகவும் பழமை யான கட்டிடங்கள். போதிய இடவசதி இல்லாமல் மரத்தடியில் வகுப்பு களை நடத்துகிறோம்” என்றார். புதிதாக வகுப்பறைகள் கட்டுவ தற்கான பணிகள் தொடங்கி மூன்று முறை ஒப்பந்ததாரர்கள் மாற்றப்பட்ட னர். ஆனால், பணிகளை முடிக்க வில்லை என்றும் அவர் கூறினார். தாட்கோ விழுப்புரம் செயற் பொறியாளர் நாகராஜ் கூறுகையில், “செல்லங்குப்பம் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளிக்கு கூடுதலாக ஆறு வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 64 லட்சம் மதிப்பீடு செய்யப் பட்டது. ஒப்பந்ததாரர்கள் இந்த பணி மிகவும் காலதாமதமானது. பிறகு, தாட்கோ நிர்வாகமே பணிகளை நேரடியாக மேற்கொண்டது. இதை எதிர்த்து ஒப்பந்ததாரர் நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்துள்ளார். மேற்கொண்டு பணிகள் செய்யா மல் நிறுத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. வழக்கு முடிவுக்கு வந்ததும் நேரடியாக தாட்கோ நிர்வாகமே கட்டுமான பணி நிறைவு செய்து தருகிறோம்”என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பின ரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பி னருமான வி. சுப்புராயன், “தலித் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வா கம் தலையிட்டு வழக்கை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார். சில ஒப்பந்ததாரர்களின் சுயநலத் தால் அரைகுறையாக நிற்கும் கட்டுமான பணியை போர்க்கால அடிப்படையில் முடித்து கொடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.
- வ.சிவபாலன்