districts

img

வங்கி கிளைகளில் கூடுதலாக எழுத்தர், கடைநிலை ஊழியர்களை நியமிக்கவேண்டும் இந்தியன் வங்கி ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

வேலூர், டிச 15 - வங்கி கிளைகளில் கூடுதலாக எழுத்தர் மற்றும் அலுவலக கடைநிலை ஊழியர் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்று இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு 19வது மாநாடு வலி யுறுத்தியுள்ளது,  வேலூரில் டிசம்பர் 14,15 நடைபெற்ற மாநாட்டில் இந்த கோரிக்கையை வலி யுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் நாள் துவங்கிய மாநாட்டில் மாநிலப் பொதுச்செயலாளர் சுனில்குமார் வேலை அறிக்கையை யயும், மாநிலப்  பொருளாளர் ஓ.ஆறுமுகம் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.  வங்கி ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் டி.ரவிக்குமார் வாழ்த்திப் பேசினார். மாநாட்டில் மாநிலத் தலைவராக கே.கணேசன், செயலாளராக எஸ்.சுனில்குமார், பொருளாளராக ஒ.ஆறு முகம் உள்ளிட்ட 32 பேர் கொண்ட மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் அனைத்து ஊழியர்களின் பணிச்சுமையை கணக்கில் கொண்டு பணிநேர வரையறையை உறுதி செய்ய வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பெண் ஊழி யர்களின் பணிச்சுமையை குறைக்க நட வடிக்கை எடுப்பதோடு, அனைத்து கிளை களிலும் பெண் ஊழியர்களுக்கென சுகா தார கழிவறை வசதியை ஏற்படுத்திட வேண்டும். பெண்கள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, உரிய பாது காப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநாட்டு வரவேற்புக்குழு செய லாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.