districts

பிளாஸ்டிக் பைகளை தடுக்க நடவடிக்கை

காஞ்சிபுரம்,மே 13-   

   ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பை போன்ற துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மஞ்சப்பை பயன்படுத்து பவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில்களில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்பட்டுள்ள இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி திறந்து வைத்தார்.