districts

img

சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை ஏற்பு: எழில் நகரில் பாதாளச் சாக்கடை குழாய்களை மாற்றி அமைக்க நடவடிக்கை

சென்னை, நவ. 14- ஆர்.கே. நகர், 41ஆவது வட்டம், கொடுங்கையூரில் உள்ள எழில்நகர் 'ஏ' பிளாக்கில் 17 தெருக்கள், 'பி' பிளாக்கில் 20 தெருக்கள், சந்திரசேகர நகரில் 9 தெருக்கள், எம்ஜி.ஆர் நகரில் 9 தெருக்கள், அன்னை சத்யா நகரில் 16 தெருக்கள் என பல தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடும் பிரச்சனை உள்ளது. இந்த பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அதிகமாக இருப்பதால், கழிவுநீர் குழாய்கள் நிரம்பி மேன்ஹோல்கள் வழியாக வெளியேறுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பகுதிகளில் ஒரு புறம் ரயில்வே தண்ட வாளமும் மறுபுறம் கொடுங்கையூர் இணைப்புக் கால்வாயும் அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர். நகரில் பொதுப் பணித் துறைக்கு சொந்த மான இடத்தில் பம்பிங் ஸ்டேஷன் அமைத்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண முடியும் என மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் பா.விமலா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் வாரிய மேலாண்மை இயக்குநரிடமும் கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில் மாநக ராட்சி  பொறியாளர்கள் கே. நமச்சிவாயம், ஏ.சர்தார் அகமது உசேன், கே.சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் பா.விமலா ஆகியோர் எழில் நகரில் உள்ள பாதாள சாக்கடையை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் எழில் நகர் பிரதான சாலையில் உள்ள பாதாள சாக்கடை   குழாய்களை பெரிய அள வில் மாற்ற உள்ளதாகவும், அப்படி மாற்றி விட்டால் கழிவுநீர் வெளியேறும் பிரச்சனை இருக்காது என்றும் தெரிவித்தனர்.