சென்னை, மே 30 - சென்னையில் உள்ள மயானங்க ளில் உடல்களை புதைக்க, எரிக்க கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஆர்.பிரியா எச்சரித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் செவ்வாயன்று (மே 30) ரிப்பன் மாளிகையில், மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, சென்னை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை 4 குழுக்களாக பிரித்து நான்கு வண்ண டி-சர்ட்களுக்கு ரூ62 லட்சம் மதிப் பீட்டில் கொள்முதல் செய்யவும், ரூ5 லட்சம் மதிப்பீட்டில் இசைக்கருவிகள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நேரமில்லா நேரத்தில் பேசிய 92வது வார்டு உறுப்பினர் திலக், மயான பூமியில் ஒரு உடலை தகனம் செய்வதற்கு ரூ50 ஆயிரம் வரை பணம் கேட்பதாக புகார் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த மேயர், உடல்களை புதைக்க, எரிக்க மாநகராட்சி மயானத்தை இலவசமாக பயன் படுத்திக் கொள்ளலாம். மயானத்தில் அனைத்து சேவைகளும் இலவசம் என அறிவிப்பு பலகை வைக்கப்படும். இதனை மீறி பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கணக்குக்குழுத் தலைவர் தனசேகரன் குறிப்பிடுகையில், “3 மண்டலங்களை ஆய்வு செய்ததில், திருமண மண்டபங்கள், தனியார் அரங்குகள் மற்றும் திரையரங்குகள் ரூ100 கோடிக்கு மேல் சொத்துவரி பாக்கி வைத்துள்ளன. இதற்கு நீதி மன்ற வழக்குகளை காரணமாக கூறு கின்றனர். வழக்குகளை துரிதப்படுத்தி, முறையாக வரி வசூல் செய்தால் மாந கராட்சிக்கு பலநூறுகோடி வருவாய் கிடைக்கும்” என்றார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணை யர் ஜெ.ராதாகிருஷ்ணன் குறிப் பிட்டார். 500 தூய்மை பணியாளர்கள் ஓய்வு “மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் தனியார் வாயிலாகவும், 5 மண்ட லங்களில் மாநகராட்சி வாயிலாக வும் தூய்மை பணி மேற்கொள்ளப்படு கிறது. இந்த 5 மண்டலங்களில் இருந்து சுமார் 500 தொழிலாளர்கள் நடப்பாண்டில் ஓய்வு பெறுகின்றனர். எனவே, காலியாகும் தூய்மை பணி யாளர்களின் எண்ணிக்கை அடிப்படை யில் புதிதாக நியமனம் செய்ய மேயர் உள்ளிட்டோருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஆணையர் தெரிவித்தார்.