திருவள்ளூர், ஆக. 26- சிறுபுழல்பேட்டையில் ஆரம்ப சுகாதார துணை நிலைய கட்டடம் கட்டுவதை தடுக்கும் நபர்கள் மீது கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார். கும்மிடிப்பூண்டி வட்டம், சிறுபுழல் பேட்டை ஊராட்சியில், புதுப்பேட்டை, முத்துரெட்டி கண்டிகை, சிறுபுழல் பேட்டை காலனி, ரெட்டிப்பாளையம் ஆகியவற்றில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலான மக்கள் கூலி வேலை செய்துவருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றிலும் சில தனியார் நிறுவனங்கள் லாபம் மட்டுமே நோக்கமாக செயல் பட்டு வருவதால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் இங்குள்ள ஆரம்ப சுகாதார துணை நிலையம் கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கி றது. இதனால் அந்த கிராமங்களில் உள்ள கருவுற்ற தாய்மார்கள், குழந்தை களுக்கு தடுப்பூசி போட வெகு தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. மேலும் நீரிழிவு நோய் , காய்ச்சல் போன்ற நோய்களுக்கு கூட மருத்துவம் பார்க்க முடியவில்லை. தனியார் மருத்துவமனைக்கு சென்றால் ஆயிரக் கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளதால் மக்கள் வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் சிறுபுழல்பேட்டை யில் ஆரம்ப சுகாதார துணை நிலைய புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து சிபிஎம் சிறுபுழல்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிகுமார் மக்களின் நீண்ட கால கோரிக்கையை கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திர சேகரிடம் தெரிவித்துள்ளார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக 14 அன்று கட்டு மான பணிக்கு ஆணை வழங்கி யுள்ளார். கட்டடம் கட்ட ரூ.39 லட்சத்து 28 ஆயிரத்து 207 நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுபுழல்பேட்டை யில் புதிய ஆரம்ப சுகாதார துணை நிலைய கட்டடம் கட்டி, ஆக 19 அன்று காலை 9 மணியளவில் ஒன்றிய கவுன் சிலர் ரவிக்குமார் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் வேலை துவங்க சென்ற போது, சிறுபுழல்பேட்டை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தூண்டு தலின் பேரில், உறவினர்கள் கும்பலாக வந்து பணியை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் இது என்னுடைய ஊர். இங்கு நாங்கள் தான் எல்லா வேலையும் செய்வோம், மீறி நீங்கள் வேலை செய்தால் விபரீதங்கள் நடக்கும் என்று மிரட்டியுள்ளனர். அரசு பணியினை தடுத்து நிறுத்து வது இந்திய அரசியல் சட்டப்படி குற்றமாகும். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார துணை நிலைய கட்டடத்தை கட்டி முடித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்களின் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.