districts

img

தொழிலாளர் சட்டத்தை மீறும் பீடி கம்பெனிகள் மீது நடவடிக்கை வேலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

வேலூர், நவ.29 - வேலூர் மாவட்டத்தில் பீடித் தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒன்றிய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பீடி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு, பீடித் தொழி லாளர்களுக்கு ஆலோசனை குழு அமைக்க வேண்டும். வாரத்திற்கு 6 நாள் வேலை, வேலையில்லா நாட்களுக்கு லே ஆப் சம்பளம் வழங்க வேண்டும். தொழி லாளர்களிடம் பிடித்தம் செய்த பி.எப் பணத்தை மோசடி செய்யும் டிரேட் மார்க் பீடி கம்பெனிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் பீடித் தொழிலாளர்களின் சட்டத்தை மீறும் டிரேட் மார்க் பீடி கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.சரவணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் துவக்கி வைத்தும், மாநிலத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் நிறைவு செய்தும் பேசினர். மாவட்டச் செயலாளர் வி.நாகேந்திரன், பொருளாளர் ஆர்.மணிமாறன், துணைத் தலைவர்  பி.காத்தவராயன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.