districts

img

அரசு பள்ளியில் குவியும் தனியார் பள்ளி மாணவர்கள்

சென்னை, ஜூன் 13 - குன்றத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று சென்றனர். கோடை விடுமுறை முடிந்து திங்களன்று (ஜூன் 13)  பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இந்த கல்வி ஆண்டிற்கான  மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. 8ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் (டிசி) இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். முந்தைய பள்ளிகளிடம் டிசி பெற்று அதை மாணவர்கள் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது. கல்விபெறும் உரிமை சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்றத்தூர் நகராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்களது பெண் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வமுடன் அந்த பள்ளியை நோக்கி வருகின்றனர். குறிப்பாக 6 முதல் 12ஆம் வகுப்பு வரை இயங்கும் இந்த பள்ளியில் குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பெற்றோர் தங்களது பெண் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்க்க நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர். கடந்த கல்வியாண்டில் 2 ஆயிரத்து 65 மாணவிகள் பயின்று வந்த இந்தப் பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் அதைவிட கூடுதலாக மாணவிகள் சேர்க்கை இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.