districts

“பெட்ரோல் டீசல் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றுங்கள்” சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை,ஏப்.9- பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப  ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என கடந்த 2013 ஆம் ஆண்டு அரசாணை  பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசா ணையை அமல்படுத்தும்படி உத்தர விடக் கோரி வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், அதிக கட்டணம் வசூலித்து பயணிகள் ஏமாற்றப்படுவதை தடுக்க, ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது தொடர்பான அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என  கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசார ணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கடந்த 2013 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை யின்படி அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப் பட்டுள் ளதாகவும், அதன் அடிப்படை யிலேயே கட்டணம் வசூலிக்கப்படு வதாகவும், பிரிண்டர் பொருத்த அதிக  செலவாகும் என்பதால் அதை பொருத்த வில்லை என்றும் தெரிவித்தார். இதை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தியிருந்தாலும் அவை செயல் படுவதில்லை என்றும், ஆட்டோ ஓட்டு னர்கள், பயணிகளிடம் தங்கள் விருப்பம் போல கட்டணம் வசூலிப்பதாகவும்  குறை கூறினார். இதையடுத்து, மீட்டர் பொருத்தி யிருந்தும் அவற்றை செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய போக்கு வரத்து துறையும், காவல் துறையும்  திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மீட்டரை  செயல்படுத்தாத ஆட்டோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தர விட்ட நீதிபதிகள், பெட்ரொல் - டீசல்  விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால், அவற்றின் விலையின் அடிப்படையில், ஆட்டோ உரிமையா ளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். ஆட்டோ கட்டணங்களை மாற்றி யமைக்க நீண்ட நடவடிக்கையை பின்பற்றாமல், பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாற்றும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் எனவும் நீதிபதிகள், அரசுக்கு யோசனை தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.