அரசாணை 204 இன் படி ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்த வேண்டும். அதிக கட்டணம் வசூல் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் செவ்வாயன்று மாவட்ட தலைவர் எம். சண்முகம் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணை தலைவர்கள், துணை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். வாலாஜா வட்ட தலைவர் ஆர். முனிரத்தினம் வரவேற்புரை ஆற்றினார். மாநிலத் துணைத் தலைவர் நிலவு குப்புசாமி, மாவட்ட செயலாளர் அ. அப்துல் ரஹீம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.