districts

img

ஊதியம், ஊக்கத்தொகை குறைப்பை ரத்து செய்ய வேண்டும்

ஊதியம், ஊக்கத்தொகை குறைப்பை ரத்து செய்ய வேண்டும், இஎஸ்ஐ, பிஎப் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கார்த்தி தலைமையில் வெள்ளியன்று (மே 27) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி, துவக்கி வைத்தார். விவசாய சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் எம்.கணேஷ் வாழ்த்து பேசினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஏ.பழனியப்பன், மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.