districts

img

சென்னை மாநகராட்சி பணியாளர்களின் பதவி உயர்வை சிதைக்கும் நடவடிக்கையை  கைவிட வேண்டும்

சீர்திருத்தம் என்ற பெயரில் சென்னை மாநகராட்சி பணியாளர்களின் பதவி உயர்வை சிதைக்கும் நடவடிக்கையை  கைவிட வேண்டும், அடிப்படை பணியாளர் முதல் உயர் பதவி வரை பணி மூப்பின் அடிப்படையில் கிடைக்கும்  பதவி உயர்வை பறிக்கும் புதிய விதியை ரத்து செய்ய வேண்டும், அரசாணை 45ஐ அமல்படுத்தி  335 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியின் பெருமையைசீர்குலைக்கும் நடவடிக்கையை  கைவிட வேண்டும், இந்தியாவில் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டத்தை (சிசிஎம்சி ஆக்ட் 1919)  மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.