districts

img

தனியார்மயத்தை கைவிடுக! அங்கன்வாடி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, நவ. 21 - அங்கன்வாடி திட்டத்தை தனியார்  மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று ஊழியர்கள் வலி யுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 4வது மாநாடு திங்களன்று (நவ.21) கிண்டி யில் நடைபெற்றது. இதில், சிறப்பு காலமுறை ஊதி யத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஊதியமாக ஊழியர்களுக்கு 26 ஆயிரம் ரூபாயும், உதவியாளர்க ளுக்கு 18 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும். பணிக்கொடையாக ஊழியர்க ளுக்கு 10 லட்சம் ரூபாயும், உதவி யாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும், துறையை தவிர்த்த பிற பணிகளை வழங்க கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் கே.நிர்மலா தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன் தொடக்க உரை யாற்றினார். செயலாளர் ஜி.ஸ்ரீதேவி வேலை அறிக்கையும், பொருளாளர் ஏ.விஜயலட்சுமி வரவு செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். மாநிலச் செயலாளர் எஸ்.ஹேம பிரியா, மாவட்ட நிர்வாகிகள் சி.சாந்த குமாரி, ஆர்.சாந்தி, எம்.சுதா, எம்.கவுரி உள்ளிட்டோர் பேசினர். மாநில பொருளாளர் எஸ்.தேவமணி நிறை வுரையாற்றினார்.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக சி.சாந்த குமாரி, செயலாளராக கே.நிர்மலா, பொருளாளராக ஜி.ஸ்ரீதேவி ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.