districts

img

ஆவின் பால் வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து

வேலூர், ஜூன் 8-

    வேலூர், ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரி யில் இயங்கி வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  

    ஆவின் நிறுவனத்தில் நள்ளி ரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பால்பாக்கெட்டுகள் எடுத்துச் செல்ல செவ்வாயன்று ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் ஆவின் அலுவல கத்துக்கு வந்திருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு, 2 வாக னங்களையும் ஆய்வு செய்தார்.  

   அப்போது ஒரு வாகனம் போலியானது என தெரிய வந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வாகனம் மூலம் தினமும் சுமார் 2,300 லிட்டர் கடத்தப்பட்டு பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்துள்ளது. 2 வேன்களை ஆவின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

   இந்நிலையில் நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி விட்டு, ஆவின் வளா கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆவ ணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர். இது தொடர்பாக ஆவின் உதவி பொது மேலாளர் சிவக்குமார் (விற்பனை) நிர்வாகம் சார்பில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  

    அதனைத்தொடர்ந்து, ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     இந்த நிலையில், ஆவினில் இருந்து வெளியே செல்லும் வாக னங்களை, கூடுதல் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு பரி சோதனை செய்த பின்பே வெளியே அனுப்பப்பட்டது. பால் பாக்கெட்டுகள் செல்லும் ஊர், முகவர்களின் விவரம் மற்றும் சரியான நபரிடம் தான் சென்று சேருகிறதா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  

   ஆவின் நிறுவனத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வாகன விதிமீறலில் ஈடுபட்ட வர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க ஆட்சியர் குமார வேல் பாண்டியன் உத்தர விட்டுள்ளார்.

     இதில் ஒரே பதிவு எண் கொண்டு வாகனம் இயக்கியது குறித்து வரும் 25 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 2 வாக னங்களின் ஒப்பந்தங் களும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு வாகனங்களில் பால் வினி யோகம் செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறி வித்துள்ளது. மேலும் பறி முதல் செய்யப்பட்ட வாக னத்தை விடுவித்தது குறித்து ஆவின் வளாக பாது காப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.