districts

img

பழனியப்பா தெருவில் மழைநீர்க் கால்வாய் மன்றக் கூட்டத்தில் ஆ.பிரியதர்ஷினி வலியுறுத்தல்

சென்னை, ஜன. 30 - பழனியப்பா தெருவில் மழைநீர்க்கால்வாய் அமைக்க வேண்டும் என்று மன்றக்கூட்டத்தில் 98வது வார்டு உறுப்பினர் ஆ.பிரிய தர்ஷினி வலியுறுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் வியாழனன்று (ஜன.30) நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பேசிய ஆ.பிரியதர்ஷினி, பழனியப்பா தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெள்ளம் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். பழுதடைந்துள்ள மழைநீர்க்கால்வாயை புதுப்பித்து கட்டித்தரப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, பழனியப்பா தெரு வில் உள்ள பழைய மழை நீர் வடிகால்வாயை இடித்து விட்டு புதிய கால்வாய் அமைக்க ரூ.71.83 லட்சம் மதிப்பீடு தயாரிக்கப் பட்டுள்ளது. வார்டுக்குழு அனுமதி, நிர்வாக அனுமதி பெற்று நிதி ஒதுக்கி, ஒப்பந்தம் கோரி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். அப்போது, கால்வாய் அமைக்கும் பணிகளை துரிதமாக தொடங்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன்பு பிபி காலனி விரிவு பகுதியிலும் இதே பிரச்சனை இருந்தது. மே, ஜூன் மாதங்களில் பணிகளை தொடங்கி மழைக்காலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க முடிவதில்லை, எனவே, விரைந்து பணியை தொடங்க வேண்டும் என்று பிரியதர்ஷினி கோரிக்கை வைத்தார்.