சென்னை, மே 12- ஓய்கூதியர்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து வரும் ஒன்றிய அரசின் சுகாதாரத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் சென்னை பெசன்ட் நகரில் வியாழ னன்று (மே 12 ) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒன்றிய அரசின் சுகாதாரத் திட்டம் கூடுதல் இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.ராகவேந்திரன், மாநில பொதுச் செயலாளர் பி.மோகன், சென்னை மாவட்ட செயல் தலைவர் ஸ்ரீவெங்கடேஷ், மாவட்டப் பொருளாளர் சி.சேகர் ஆகியோர் பேசினர். அங்கீகரிக்கப்பட்ட மற்றும் புதிய தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையை மேம்படுத்தப்பட வேண்டும். ஒன்றிய அரசின் சுகாதாரத் திட்டத்தில் இல்லாத பகுதிகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தின் நிறைவில் ஒன்றிய அரசின் சுகாதாரத் திட்ட கூடுதல் இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டது.