வேலூர், நவ.10 - நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கைகள் சமர்பிக்க 10 முதல் 17 வரையுள்ள மாண வர்கள் பங்கேற்கும் குழந்தைகளின் ஆசி ரியர்களுக்கான பயிற்சி முகாம் வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் அமுதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். நீரினால் பரவும் நோய்கள், நீர் பாது காப்பில் பாரம்பரிய நவீன தொழில்நுட்ப யுக்திகள், நீர் சார்ந்த சுகாதாரமும் பொது மருத்துவமும், நீர் சூழலும் பாதுகாப்பும், நீர் அனைவருக்குமானது என்ற 5 தலைப்புகளில் ஆக்சிலியம் கல்லூரி உதவி பேராசிரியை கே.வித்யா, டிகேஎம் கல்லூரி உதவி பேராசிரியர் வி.ரேகா, மாவட்ட துணைத்தலைவர் கே.விஸ்வ நாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு.செந்தமிழ்செல்வன், ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் கோபால.ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்கான வழிமுறைகளை செயல் விளக்கம் அளித்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் கா.பாஸ்கரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆர்.காயத்ரி வாழ்த்தி பேசினர். பின்னர் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது. மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை யிடம் பெறப்பட்ட அனுமதியின் பேரில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளின் படி மாவட்டம் முழுவதும் இருந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மற்றும் தனியார் பள்ளி அறிவியல் ஆசிரியர்கள், வேலூர் கிளை நிர்வாகிகள் பேராசிரியர் கே.தேவி, முத்து.சிலுப்பன், பா.சேகர் உள்ளிட்ட 220 பேர் இந்த முகாமில் பங்கேற்றனர்.