விழுப்புரம், ஜூன்.25-
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கால்நடை பரா மரிப்புத்துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செஞ்சி வட்டம், ஆலம் பூண்டி கிராமத்தில் வரும் 27 ஆம் தேதி சிறப்பு கால் நடை மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தப்படுகிறது.
இந்த முகாமையொட்டி கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்த கன்று உரிமை யாளர்களுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.