புதுச்சேரி, ஜன.21- புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சி யகமும் இணைந்து நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி புதுச்சேரி உப்பள பழைய துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.20) துவங்கியது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமை ஏற்று மாணவர்களின் அறிவி யல் படைப்புகளின் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த இடைநிலை மற்றும் உயர்நிலை பிரிவுகளில் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி யில் வெற்றி பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தனிப் பிரிவில் 15 படைப்புகளும், குழு பிரிவில் 10 படைப்புகளும் ஆசிரியர் பிரிவில் 10 படைப்புகளும் என ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 35 படைப்புகள் வீதம் மொத்தம் 210 மிகச் சிறந்த அறிவியல் மாதிரிகள் மற்றும் கண்டு பிடிப்புகள் போட்டிக்கான காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் பல புதிய கண்டு பிடிப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. தென்னிந்திய அளவில் நடைபெறும் கண்காட்சி ஜனவரி 25 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சியை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்துப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை பொதுமக்களுக்கு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி கள் நடைபெறுகிறது. முன்னதாக துவக்க விழாவில் கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.