ஆற்காடு, ஜூன் 5-
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அயிலம் ஊராட்சி, கவரபாளையம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக அரசு சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்டி முடிக்கப்பட்ட கால்வாய் நடுவே குடிநீர் அடி பம்பு உள்ளது. குடிநீர் அடி பம்பை அகற்றாமல் இருப்பதால் கழிவுநீர், குடிநீருடன் கலக்கும் அபாயம் உள்ளது.
அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கவனக் குறைவே இந்த தவறு நடக்க காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே உடனடியாக வேறு இடத்தில் குடிநீர் அடி பம்ப்பை அமைக்க வேண்டும் என்றும், சம்பந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.