சென்னை, ஆக.8- உயிருக்கு ஆபத்தான நோய்க ளால் ஏற்படும் வலியை போக்கவும், சிகிச்சை அளிக்கவும் உள்ள தனிபிரி வில் செய்யப்பட்டுள்ள வசதிகளை, சேவைகளை அமெரிக்க டாக்டர் நேரில் பாராட்டினார். அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையில், பிரத்தியேகமான தாங்கமுடியாத வலி சிகிச்சை பிரிவு தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் நிறு வப்பட்டு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. இப்பிரிவு உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வலி மேலாண்மை, துன்பகரமான அறிகுறிகளின் கட்டுப்பாடு மற்றும் உளவியல் சக ஆதரவு போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. மருத்துவ புற்றுநோயியல் துறையால் வலி சிகிச்சைக்கான புதுமையான அணுகுமுறைகள் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற நியூ யார்க்கின் செயின்ட் ஷான்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரி யரான எப்டேசம் அகமது, சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு பேசினார். மேலும் அங்கு வலி தணிப்பு சிகிச்சை பிரிவில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். இப்பிரிவின் மூலம் நோயாளி களுக்கு வழங்கப்படும் சேவைக ளை வெகுவாகப் பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் பெய்டு மேத்தா மருந்தியல் கல்லூரி செயலாளர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கான வலி மற்றும் நோய் ஆதரவு சிகிச்சை குறித்த சிறு புத்தகத்தை வெளியிட்டார்.