districts

img

கழிப்பறை வசதி இல்லா பள்ளி அவசரத்திற்கு ஒதுங்க முடியாத அவலம்

கள்ளக்குறிச்சி, நவ-20 கள்ளக்குறிச்சி மாவட்டம், திரு நாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆரிநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 250 மாண வர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு வகுப்பறைகள் புதிதாக கட்டிக் கொடுத்தாலும், கழிப்பறை வசதி என்பது அறவே கிடையாது. ஆனால், இங்கு படிக்கும் பெண் குழந்தைகள் அவசரத்திற்கு பள்ளியைச் சுற்றிலும் அமைந்துள்ள வீடுகள், கோவிலுக்கு சுற்றுச்சுவர் ஓரத்தில் ஒதுங்க வேண்டியுள்ளது. கழிப்பறை,  பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிடத்தர கோரி ஊராட்சி மன்றம், கல்வித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெற்றோர் தரப்பில் பல முறை புகார் தெரிவித்தும் அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சியர் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு வந்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நமது நிருபர்