கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கக் கோரி கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் வி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.