திருவள்ளூர், அக்.10- திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டக் குழு அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா வியாழனன்று (அக்.10), நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்மு கம் பள்ளிப்பட்டு வட்ட விவசாயிகள் சங்கத்தின் அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் பேசும் போது, விவசாயிகள் சங்கத்தின் அலுவலகம் வெறும் கான் கிரீட் கட்டிடமாக இல்லாமல் பள்ளிப்பட்டு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உள் ளிட்டு அனைத்து தரப்பின ரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அலுவலக மாக அமையும் என்றார். நிழ்ச்சிக்கு விவசாயி கள் சங்கத்தின் பள்ளிப் பட்டு வட்ட துணைச் செயலாளர் என்.நந்தகுமார், வட்ட துணைத் தலைவர் டி.எஸ்.ஏழுமலை ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செய லாளர் பி.துளசிநாராயணன், மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், மாவட்ட பொரு ளாளர் சி.பெருமாள், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல் அகமது, கரும்பு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஸ்ரீநாத், வட்டத் தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன், வட்ட செயலாளர் வி.குப்பன், பொருளாளர் ஜி.ரமேஷ், ஊத்துக்கோட்டை வட்டத் தலைவர் டி.விஸ்வநாதன், திருத்தணி வட்ட தலைவர் பாலாஜி ஆகியோர் பேசி னர். விஜயகுமார் நன்றி கூறி னார்.